பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 1Ꮩ அதே போல நாமும் நமது நாட்டுப் பெரும் புலவர்களையும், கவிஞர் களையும், புகழ் பெற்ற எழுத்தாளர்களையும் பாராட்டியும் விழாக்கள் எடுத்தும் பிரபலப்படுத்த வேண்டும். முன்னைக் காட்டிலும் இப்போது குறிப்பாக நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இப்பணி களை நாம் தமிழகத்தில் செய்துவருகிறோம். ஆயினும் இன்னும் போதாது தமிழ்க் கவிஞர்களை பாரதமெங்கும், உலகமெங்கும் பாராட்டவும் அவர்களுடைய புகழ் பரப்பவும் அவர்களுடைய நூல்களை இதர மொழிகளிலும் பரப்ப வேண்டும். வியாசர், வால்மீகி, வசிட்டர், போதாயனர், வாம தேவர், கெளடில்யர் (சாணக்கியர்) வாத்சாயனர் முதலிய பண்டய கால ஞானிகள் முதல் இன்றைய நாள் வரையிலுமான அறிஞர்கள் பாரத நாட்டில் உள்ள பதினெண் மொழிகளிலும் உள்ள அறிஞர்கள் தமிழ் நாட்டில் சங்க காலப் புலவர்கள் கம்பர் திருவள்ளுவர், இளங்கோவடி களார், ஒளவையார், மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்கள், சேக்கிழார், இராமானுஜர், சங்கரர், மத்துவர் மற்றும் இராமலிங்க சுவாமிகள் மகாகவி பாரதியார் வரை நமது சான்றோர்களை நினைவு கொள்ள வேண்டும். மேலும் நமது பாரம் பரியமான பல மேலோர்கள் பற்றிய விவரங்களையும் சாதனைகளையும் சேகரித்து அவைகளை வெளிக் கொணர வேண்டும். நமது நாட்டில் நடந்த பல படையெடுப்புகளாலும், போர்களாலும் நமது இலக்கியங்கள், அறநூல்கள், இதர அறிவுத்துறை மற்றும் அறிவியல் நூல்கள் இலக்கண நூல்கள், தத்துவஞான நூல்கள் வைத்திய நூல்கள் பலவும் அழிந்தும், தொலைந்தும் போயின. எஞ்சிய சிலவற்றைப் பாதுகாத்து வைத்தவர்களும் உண்டு. அவைகளை யெல்லாம் வெளிக் கொணர வேண்டும். தமிழகத்தில் பல பெரியோர்களும் பண்டய தமிழ் நூல்கள் அடங்கிய ஏடுகளைத் தேடி அவைகள் இருக்கும் இடங்களைக் கண்டுபிடித்து, வெளிக் கொணர்ந்து அவைகளைப் படியெடுத்து அச்சிற்குக் கெண்டு வந்திருக்கிறார்கள். அத்தகைய பெரியோர்களில் மகா மகோபாத்யாய உ.வெ.சாமிநாத அய்யர் அவர்கள் முக்கிய இடம் பெறுகிறார். இன்னும் ஏராளமான பல பண்டைய இலக்கிய நூல்களும் வைத்திய நூல்களும் இதர இலக்கண, அறிவியல் மற்றும் தத்துவ நூல்களும் வெளிக் கொணர வேண்டியதிருக்கிறது. அத்தகைய அரும் பணிகளில் பல சிறந்த ஆர்வம் மிக்க அறிஞர்களும் அமைப்புகளும் பல்கலைக் கழகங்களும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இம் முயற்சிகளை மேலும் அதிகப் படுத்த வேண்டும், துரிதப்படுத்த வேண்டும், விரிவுப் படுத்த வேண்டும்.