பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 133 தேற லமிர்தம் தெவிட்டிடி னுங்கனிவாய் ஊற லமிர்தம் உவட்டாதே-வீறுமதன் தன்னாணை நள்ளாறர் தம்மானை யும்மானை என்னானை தொண்டியா ரே! (213) தேன் கலந்த பாலாகிய அமுதம் உண்ணத் தெவிட்டினாலும், உன்னுடைய கோவைக் கனிபோன்ற வாயிதழ்க் சுடையிலே ஊறிவரும் அமுதம் உண்ணஉண்ணத் தெவிட்டாத இன்பத்தைத் தருவதாயிருக்கிறது. வீறு மதனின் ஆணை! நள்ளாற்றிலே கோயில் கொண்டிருக்கும் பெருமான் மீது ஆணை உன்மீது ஆணை! என்மீது ஆணை தொண்டியாரே எம்மைக் கைவிடாதேயும் என்பது பொருள். சாகலானான் வேளாளன் ஒருவன் வீட்டிற்குக் காளமேகம் சென்றார். வேளாளர்கள் விருந்தினைப் பேணுகின்ற பண்பு கொண்டவர்கள். ஆனால், அந்த வேளாளனோ பண்பற்றவனாக இருந்தான். வீட்டில் இருந்துகொண்டே, மனைவி மூலம், வீட்டில் கணவர் இல்லை என்று சொல்லிக் கவிஞரை அனுப்பிவிட முயன்றான். அவனுடைய செயல் கவிஞரை வருத்த, அவர் பாடிய செய்யுள் இது. - பாலலகை யன்று பரிந்தளித்த கோத்திரத்துக் காலமென வந்த அடைக்கலவன் - சூலந் திருக்கையி லேயேந்தும் சிவனிருக்க வேளான் இருக்கையிலே சாகலா னான். (214) “ஒருபால் உடலைத் தாங்கி நின்றே பேயாக உருமாறிய காரைக்கால் அம்மையார், அக்காலத்தே பரிவுடன் பேணிக் காத்த சிவனடியார் கூட்டத்திலேதான் வாழுதற்கான காலபேதம் என்ற ஒன்றைக் கருதியே வந்து சேர்ந்திருக்கின்றான் இந்த வேளாளன். எமனது பாசத்துட்படாது அடைக்கலம் தருபவனாகிய, சூலத்தைத் திருக்கையில் ஏந்தியிருக்கும் சிவபிரான் இருக்கவும், இவன் உடலில் 'உயிர் இருக்கையிலேயே இல்லாமற்போய்ச் சாகிறவன் ஆகின்றானே' என்பது பொருள். இருந்தும் இல்லையென்பதனால், அவனை இல்லாதவ னாகவே கொண்டு, 'சாகலானான்’ என்கின்றார் கவிஞர். இதன்பின், அவன் தன் செயலுக்கு நாணியவனாகக் கவிஞரைப் பணியக் கவிஞரும் அவனை மன்னித்து, அவனாலே உபசரிக்கப் பெற்று மகிழ்ந்தனர்.