பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோவை. இளஞ்சேரன்


மின்மினியும் விண்மீனும்
மினுக்குவதில் ஒன்றேயாம்!
நன்முல்லை தும்பையிவை
நறுமணத்தில் ஒன்றாமோ?
என்மொழியுஞ் செந்தமிழ்தான்
என்றேதாம் கூறிடினும்,
தன்மானம் இல்லையெனில்
தமிழரெனத் தகுவாரோ ?


தமிழனெனில் தமிழகத்தில்
தமிழுயர்வுக் கெழவேண்டும்:
தமிழனெனில் தாய்நாட்டின்
தனியுயர்வுக் கெழவேண்டும்:
தமிழனென உணர்வோடு
தன்னினத்தைத் தழுவவேண்டும்:
தமிழனெனில் உலகமதில்
தலைதுாக்கி நிற்கவேண்டும்.


50