பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குவளை-செங்கழுநீர்
நிம்பேயா நௌசாலியா
(Nymphaea nouchalia, Burm.f)

‘தண் கயக்குவளை’ என்ற கபிலரின் கூற்றுக்கு (குறிஞ். 63) ‘குளிர்ந்த குளத்தில் பூத்த செங்கழுநீர்ப்பூ’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர்.

சங்க இலக்கியப் பெயர் : குவளை
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : நீலம், செங்குவளை, காவி
பிற்கால இலக்கியப் பெயர் : செங்கழுநீர், கழுநீர், நீலம், காவி, செங்குவளை, நீலோற்பலம்.
உலக வழக்குப் பெயர் : நீலத்தாமரை, நீலோற்பலம்.நீல அல்லி, செங்கழுநீர்.
தாவரப் பெயர் : நிம்பேயா ஸ்டெல்லேட்டா என்று குறிப்பிடப்பட்டது. இப்போது இதனை நிம்பேயா நௌசாலியா என்று மாற்றியுள்ளதாகக் கூறுவர். ஆகலின் இது Nymphaea nouchalia, Burm.f. எனப்படும்.

குவளை செங்கழுநீர் இலக்கியம்

குவளை என்பது பொதுவாகச் செங்குவளையாகும். இதனை செங்கழுநீர் எனவும் நீலோற்பலம் எனவும் கூறுவர் .

தண்கயக் குவளை-குறிஞ். 63
பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்

-மதுரைக் . 566