பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

சங்ககாலச் சான்றோர்கள்



மழுங்கச் செய்து, அழகிய நுண் சொல் தேர்ச்சிப் புலவர் நாவிலே சென்று அன்றே விழுந்தது எமக்குப் பற்றாகிய எம் இறைவன் யாண்டுளனோ! இனி, பாடுவாரும் இல்லை; பாடுவார்க்கு ஒன்று ஈவாருமில்லை; என்னுங் கருத்தமைய

சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே!
பெரியகள் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்னும் மன்னே! சிறுசோற் குறும் தணிபல கலத்தன் மன்னே! பெருஞ்சோற் றனும் தனிபல கலத்தன் மன்னே! என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே !
அம்பொடு வேல்துழை வழியெல்லாம் தான்திற்கும் மன்னே!
தரத்தம் நாறுத் தன்கையாற்
புலவுதாறும் என்தலை தைவரும் மன்னே!
அருந்தலை யிரும்பாணர் அகல்மண்டைத் துளை உரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல் துண்தேர்ச்சிப் புலவர் நாவிற் சென்றுவீழ்ந் தன்(று).அவன்
அருநிறத்(து) இயங்கிய வேலே !
ஆசா(கு) எந்தை பாண்டுளன் கொல்லோ! இனிப்பாடுநரும் இல்லை; பாடுநர்க்(கு)ஒன்று ஈகுநருமில்லை;
பணித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர் சூடாது வைகி யாங்குப் பிறர்க்(கு)ஒன்று ஈயாது வீயும் உயிர்தவப் பலவே !”

(புறம், 235)

என விண்ணும் மண்ணும் கண்ணீர் வடிக்கத் தம் உள்ளத்தில் பிரிட்டு எழுந்த துயரவெள்ளத்தைச் செய்யுள் வடிவாக்கினார்.

ஆனால், அந்தோ ! ஒளவையாரின் கவிதையும் கண்ணீருங்கூட இனி அதிகமானை உயிர்ப்பியாவே அதிய