பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

483


நன்று ஆங்கால் நல்லவாக்காணுதல் போலவே அன்று ஆங்காலும் அல்லற்படாது அனுபவித்தல் வேண்டும் என்பது கருத்து. காணுதல் - அனுபவித்தல். மக்கள் தாமே முன்செய்துகொண்டன இருவினையாதலாலும் அவை தத்தம் பயன்களாகிய இன்பதுன்பங்களை ஊட்டாது கழியமாட்டா ஆதலாலும், இருவினைப்பயன்களாகிய இன்பம் துன்பம் என்னும் இரண்டுமே வினைசெய்த மக்களால் மனம் பொருந்தி நுகரத்தக்கனவாகும். அங்ங்னமாகவும் அவற்றுள் நல்லதன் பயனாகிய இன்பத்தை மட்டும் உளம் இயைந்து அனுபவித்துத் தீயதன் பயனாகிய துன்பத்திற்கு உளம்பொருந்தி நுகராது வெறுத்து வருந்துதல் அறிவுடையார் செய்கையன்றாம் என ஆசிரியர் இத் திருக்குறளால் அறிவுறுத்தியுள்ளமை கானலாம். இறைவனது திருவருட்பதிவால் இருள் மலந்தேயும் நினையினராகிய மெய்யுணர்வுடையார்க்குரியதாகச் சைவசித்தாந்தம் கூறும் இருவில்னையொப்பின் இயல்பு இத்திருக்குறளில் இடம் பெற்றுள்ளமை நுணுகி நோக்கற்பாலதாகும்.

உலகத்துவாழும் உயிர்கள் நுகர் தற்குரிய இன்ப துன்பங்களாகிய நுகர்ச்சிகள் எல்லாம் அவ்வவ்வுயிர்கள் செய்த இருவினைகளின் மேலிட்டு அவற்றின் பயனாய் ஊழ்வழியாக வருதலுடைமையின் மன்னுயிர்கள் செய்யும் பல்வேறுவகை முயற்சியினைவிட ஊழே மிகவும் வலிமை வாய்ந்தது என்பதனை அறிவுறுத்துவார்,

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

குழினுந் தான்முந்துறும்” (திருக். 380)

என்றார் திருவள்ளுவர். ஊழாகிய தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தை ஆராய்ந்தாலும் அச்சூழ்ச்சியின் வழியாகவோ அன்றிப் பிறிதொன்றன் வழியாகவோ முற்பட்டு நிற்பது ஊழ்வினை யாகும். அதனால் ஊழ்போல் வலிமையுடையனயாவை என ஊழின் வன்மையினை வற்புறுத்திக்கூறும் நிலையில் அமைந்தது இத்திருக்குறளாகும்.