பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi


   பல்லாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் மொழிப்புலத் தலைவராகப் பணியாற்றியவர் ஆவார்.
   அரிய இலக்கண, சமய நூல்களை உருவாக்கியளித்த இந்நூலாசிரியரின் ஆராய்ச்சித் திறனை இப்புதிய நூல் மூலமாக மேலும் பலரும் உணர்வர் என நம்புகிறேன்.
   இந்நூல் நன்முறையில் உருவாவதற்குப் பெருந்துணை புரிந்த பேராசிரியர் முனைவர் சோ.ந. கந்தசாமி  அவர்களுக்கும், தமிழ்ப் பல்கலைக்கழகப்  பதிப்புத்துறை  இயக்குநர் (பொ.)  முதுமுனைவர் ம.சா. அறிவுடைநம்பி அவர்களுக்கும் நன்றி.
   இந்நூலை நன்முறையில் உருவாக்கிய பதிப்புத்துறையினருக்குப் பாராட்டுதல்கள்.

20-12-2002

இ. சுந்தரமூர்த்தி