பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள்கைத் துணையுடன் அழைத்துச் செல்கிறாள்; அண்ட வெளியில் மீண்டும் இருட்டிலும் வழிகாட்டி யாய் அவள் விழிப்புற் றிடுவாள். உயர்வு, தொன்மை அன்புக் குரியவள் தன் மகனையே ஊன்றிக் கவனிக் கின்றாள்.

பாழில்ஒர் மீகாமன் சிற்றுடுக் கள் சில விரைவாய் ஆங்கே மற்ற உடுக்க ளோடுடன் திரிந்தன. பயணப் படத்தில் குறித்த வண்ணமே துணிவுடன் மேலும் உயர்ந்துயர்ந்து ஏறினான். நெருங்கிய நிலத்தாய் சிறிய நெஞ்சின் துடிப்பினில் தோய்ந்தாள்.

சிறியதா ?

அன்றே, பெரியதாம் ஏனெனில் மிகப்பெரும் அச்சம் தரும்அவ் வேளையில் அனைத்துல கத்தின் அனைவர் நெஞ்சமும் இணைந்து அங்கு ஒன்றின தங்கள் ஆற்றலின் பெருமிதத் துடனே.

I 32