பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமை இளமைதான் ஆர்க்கும் பெருமைக் குரியதில்லை - உன் அகவைக்கு மேலாம் அறிவுடைமைகொண்டு சிறந்திடுவாய்.

தாயரின் திருமுன்

தொடக்கமுதல் இறுதிவரை அன்னை யர்க்குத் தொடர்ந்துநாம் சொல்லிடுவோம் விடைவ ணக்கம். தொடக்கத்தில் குழந்தைஇளம் பருவத் தில்நாம் கவலையின்றி உரைத்ததனை மறுத்தல் இல்லை.

வெளித்தங்க எங்கட்குப் படுக்கை பெட்டி விருப்புடனே எடுத்துவைப்பார் அன்பின் அன்னை; வெளியில்யாம் வேர்த்திடவே நிற்போம், ஏனோ தடைபட்டுப் போகாதோ பயணம் என்போம்.

பின்பொருநாள் முற்றாகப் பிரியும் நாளும் பின்தொடர நோக்காடும் துயரும் கொண்டோம். அன்புமக்கள் என்பதற்கே சரியோ தப்போ அஞ்சல்வழி ஆர்வத்தை அறிவித் திட்டோம்.

அவர்கள்முன் காணாத மகளிர் தங்கள் அரியஒளிப் படங்களினை அனுப்பி வைத்தோம்; அவர்கள்பே ருள்ளமுடன் முன்பின் காணா அருமந்த மருமகட்கு வாழ்த்தி சைத்தார்.

மருமகளின் பின்சிறிய பேரர்...... பின்போ வானிருந்தோர் தொலைவரிதான் வந்து சேரும்; திரும்புகின்றாய்; மீளவொணாப் பிரிவே அன்றோ, பாட்டிக்கும். அருந்தாய்க்கும், உனக்குந் தானே.

22