பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருவீரன் பீடார் தடக்கையால் வளைத்ததுபோல் பெருவானில் கொடுவில்லின் பேரழகு தோன்றியே பெருமலைகள் பிணைக்கின்ற பென்னம் பெரும்பாலம் அருமைமிகும் நம்நாட்டின் போர்வீரர் படைப்பன்றோ!

நெக்குவிடாக் கடும்பாறை நெஞ்சை நெகிழ்வித்தே மிக்கபெருந் தாழியெனப் பழங்களும், பழங்களைப்போல் தக்கபெரும் தாழிகளும் தம்உழைப்பால் தாம்தந்தார் அக்காலம் அடிமைகளாய் நெடிதுழைத்த கலைஞர்.அவர் இக்காலம் நாம் மகிழ இறும்பூது விளைத்தனரே.

அன்னவர்தம் ஆக்கவெறி ஆர்வத் தழலாலே இன்னுயிரைத் தாம்இழந்து பாறைகளை எழில்கொழிக்கும் மென்மலர்கள் செழிக்கின்ற மேன்மை வகைப்படுத்தி நின்றபெரும் பாறைக்கு நிலையான வாழ்வீந்தார்.

2 I.