பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i GQ செளந்தர கோகிலம்

அறிமுகமானவர்கள். இதை உங்களிடம் கொண்டு வந்து கொடுத்தால், இதை இன்ன விதமாய் உபயோகிக்கலாம் என்று நீங்கள் ஏதாவது யுக்தி சொல்லுவீர்கள். அதுவுமில்லா விட்டால், நான் இதை உங்களிடமே கொடுத்து விட்டுப் போனால், இனிமேல் ஒரு வேளை அந்த இளைய சம்சாரம் முதலியோர் இருக்கும் இடத்தைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்தாலும் சரி அல்லது அவர்களுள் எவராவது இந்த ஊருக்கு மறுபடி வந்தாலும் சரி, நீங்கள் இதை அவர்களிடம் சேர்த்துவிடலாம் என்று தீர்மானித்து நான் இதை எடுத்துக்கொண்டு நேராக இந்த ஊருக்கு வந்தேன். ஆனால் அந்தக் கடைக்காரன் சொன்னது போல, இதைச் சம்பந்தப்பட்ட மனிதரிடம் கொடுத்து அதனால் பெருத்த பணத்தொகை சம்பாதிக்க வேண்டுமென்பது என்னுடைய கருத் தல்ல. இதற்காக எனக்கு ஒரு செல்லாக் காசுகூடக் கிடைக்க வேண்டுமென்று நான் ஆசைப்படவில்லை. அவ்வளவுதான் இதன் வரலாறு. இனி நீங்கள் இதை எப்படியாவது உபயோகப் படுத்திக் கொள்ளலாம். என் கோரிக்கை பூர்த்தியாகிவிட்டது. இவ்வளவோடு நான் திருப்தி அடைகிறேன் - என்றார்.

அந்த வரலாற்றை உண்மையென்றே நம்பிய அந்த ஸ்திரீ, “ஒகோ! அப்படியா சங்கதி! நீங்கள் இந்தப் பட விஷயத்தில் வெகுதூரம் பாடுபட்டிருக்கிறீர்கள். ஆனால் இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் என்பதுதான் தெரியவில்லை’ என்றாள்.

திவான் சாமியார், ‘ஏனம்மா! அந்தப் பெண்ணின் தகப்பனாரான இராமலிங்க முதலியாருடைய பூர்வீகமான ஊர் எது என்பது இந்த ஊரில் யாருக்காவது தெரிந்திருக்காதா? அவர்கள் ஒருவேளை அவர்களுடைய பூர்வீகமான இடத்திற்கு போனாலும் போயிருக்கலாம், அல்லது நீங்கள் முன் தடவையில் இன்னொரு சங்கதி சொன்னிர்களே. அந்தப் பெண்ணுக்கு யார் யாருடைய சிநேகமோ ஏற்பட்டதென்றும், அது கடைசியில் எப்படியோ முடிந்தது என்றும் நீங்கள் சொன்னீர்கள். அப்படி சிநேகமானவர்கள் யாரும் இந்த ஊரில் இப்போது இல்லையா? அவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் அந்தப் பெண்ணும் அதைச் சேர்ந்தவர்களும் இப்போது இன்ன ஊரில் இருக்கிறார்கள் என்பது