27
3. பள்ளிப் படிப்பும் பிள்ளை விளையாட்டும்
1890ம் ஆண்டிலே விருத்தாசலனர் துள்ளம்: விடுத்தார்; இராயப்பேட்டையில் குடும்பத்துடன் குடி புகுந்தார்.
முத்து முதலித் தெருவிலே ஒரு பள்ளி இருந்தது. அதன் பெயர் ஆரியன் பிரைமரி பாடசாலை’. பெரிய சாமி, சின்னச்சாமி ஆகிய இருவரும் அப்பாட சாலையில் சேர்க்கப்பட்டனர். பெரியசாமி நான்காம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப் பட்டார். சின்னச்சாமி இரண்டாம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப் பட்டார்.
இரண்டாவது வகுப்பில் தேர்ச்சி பெற்று மூன்றாம் வகுப்பில் படிக்கத் தொடங்கினர். அதுபோது கட்டுரைப் போட்டி ஒன்று கடைபெற்றது. அப்போட்டி யில் மூன்றாம் வகுப்பு மாணவரும் கான்காம் வகுப்பு மாணவரும் கலந்து கொண்டனர். போட்டியில் முதன்மையாக கின்றது கலியான சுந்தரனரின் கட்டுரையே. எனவே, முதற் பரிசு அவருக்கே அளிக்கப் பட்டது. இராயப் பேட்டை முழுவதும் அச்செய்தி பரவியது. முன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நான்காம் வகுப்பு கண்ணினர்.