பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறைமொழி

75


‘திருக்குறள்’ தமிழனுடைய தனிச் சொத்து. அது தமிழ்நாட்டுக் கருவூலமும் ஆகும். திருக்குறளில் கூறப்படாதது எதுவும் இல்லை. அதை ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ்மகளும் படித்துத் தீரவேண்டும். அதன் 1330 குறளையும் படிப்பதற்குக் குறுக்குவழி ஒன்று உண்டு. அது 133 அதிகாரத்தையும் முதலில் மனப்பாடம் பண்ணுவதுதான். அதிகாரங்களை முதலில் மனப்பாடம் பண்ணுகிறவர்கள், திருக்குறளை எளிதாகப் படிப்பதிலும், மறைமொழியை விரைவாகப் பேசுவதிலும் வெற்றி பெறுவார்கள்.

முதல் பயிற்சியாக, 10 அதிகாரங்களுக்குள் பழகராம்

அ: குப்புசாமிக்கு 1 நிறைய இருக்கும்போல் இருக்கே!
ஆ: இருந்து என்ன செய்வது? 14 இல்லையே அப்பா!
அ: உங்கள் ஊரில் 2 எப்படி?
ஆ: சிறிதும் இல்லை. அதனால் 104-ம் நடைபெறவில்லை.
அ: நமது நாயுடு 3-ல் இருப்பதுபோல 4-ஐப்பேசிக் கொண்டிருந்தாரே! இன்னும் அப்படித்தானா?
ஆ: இல்லை! இல்லை! அவர் 5-ல் புகுந்துவிட்டார்.
அ: உங்கள் பையனுக்கு 6 ஆயிற்றோ!
ஆ. ஆயிற்று.
அ: 7 எத்தனை?
ஆ: ஒன்றுமில்லை.
அ: உங்கள் மனைவி 8-ல் எப்படி?
ஆ. அவளுக்கு அது இருந்தால், எனக்கு ஏன் 31 வருகிறது.
அ: உங்களுக்கு இன்றைக்கு 9 சரிதானா?
ஆ: ஐயோ முடியாது. மன்னிக்கவும், நான் 95 அருந்துகிறேன்.
அ: அவர் ஏன் அப்படிப் பேசுகிறார்?
ஆ: அவரா? அவருக்கு 10 தெரியாது.