பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20



எடுங்கள் கு ற ளை ! படியுங்கள் நன்றாக! திருக்குறளைப் படிப்பதும் கட்டுரைகள் எழுத, சொற்பொழிவுகள் நிகழ்த்த, நூல்கள் வெளியிட, புலவன் ஆக, பொருள் திரட்ட, மேற்கோள்கள் காட்ட என எண்ணிப் படிப்பது பயனற்றதாகும். படித்து அறிந்து, அதன்படி நடந்து ஒழுகவேண்டும் என எண்ணிப் படிப்பதே பயனுள்ளதாகும்.

புறங்கூறுதல் என்பது ஒரு கொடிய நோய். அதை எளிதிற் போக்க இயலாது. அதை ஒழிக்கும் மருந்து மருத்துவ நூல்கள் எதிலுமேயில்லை. திருக்குறள் ஒன்றே அதனை ஒழிக்கும் ஒரே மருந்தைக் கூறுகிறது. அது எது தெரியுமோ? “எவரிடமும் இனியதைக் கூறு” என்பதே! செய்வீர்களா?

வாழட்டும் தமிழ்மொழி!
வளரட்டும் குறள் நெறி!!