பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களை நாம் நன்றியுடன் நினைவோம். பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல் உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக நம் பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்திய திருக்குறள் இருக்கையே இந்நூல் வெளிவர உறுதுணையாக இருந்தது என்பதனை நன்றி. ப| ன் நினைவு கூருகின்றோம். இந்நூல் வெளிவரப் பல்லாற்றா னும் உறுதுணையாகயிருந்த நமது மேன்மைமிகு துணை வேந்தர் பேராசிரியர் இராம. சேது நாராயணன் அவர்களுக்கும் என் நன்றி உரியதாகுக. இந்நூல் செம்மையுற பதிப்புப்பெற பல்லாற்நானும் துணைநின்ற தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் டாக்டர். க. சாமி ஐயா அவர்களும், நூல் விரைந்து அச்சாக துணைநின்ற பல்கலைக் கழக, வெளியீட்டுத்துறை பொறுப்பாளர் வெ. லெட்சுமணன் அவர்களும் தமிழ்த்துறை நூல் வெளியீட்டுப் பொறுப்பாளர் டாக்டர். வெ. பழனியப்பன் அவர்களும் நன்றியுடன் போற்றத். தக்கவர்கள் ஆவார்கள்.