பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



நோபல் பரிசு பெற்ற தமிழ் நாட்டின் முதல் விஞ்ஞானியுமான திரு. சர். சி.வி. ராமன் மேற்கண்ட ஜி.டி. நாயுடு கருத்தை முழுக்க முழுக்க ஆதரித்து ஏற்றுக் கொண்ட பிறகும் கூட, இந்தியத் தேசிய ஆளும் கட்சியினர்களும், அவர்களைச் சேர்ந்த மாநில ஆட்சியினர் களும் அந்த மேதையின் விஞ்ஞான விளைவுகளை ஏற்க மறுத்து விட்டார்கள் என்பதை வரும் அத்தியாயங்களில் அதைச் சற்று விரிவாகவே படிப்பீர்கள்.

தொழிலியல் விஞ்ஞானியாக விளங்கிய திரு. ஜி. டி. நாயுடு அவர்கள், மாணவர்களிடம் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் விரும்புபவர். அவர் விதிக்கும் சட்ட திட்டங்களைப் புறக்கணிப்பது மாணவர்களுக்கு அழகல்ல என்றும், அதுபோலவே ஒரு நிறுவனத் தின் கட்டுப்பாடுகளை சீர்குலைக்கும் பணியாளர்கள் முன்னேற முடியாதவர்கள் என்றும் எண்ணுபவர். திரு. ஜி.டி.நாயுடு.

மாணவர்கள்
ஒழுங்குமுறை!

கல்வி கற்கும் மாணவர்கள் உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றாரே கற்றார் என்ற குறட்பா போல, ஆசிரியர் முன்பும் ஏக்கற்றார் கற்றாராக கற்றார் என்ற கல்வி ஒழுக்கம் வளர வேண்டும் என்ற கருத்துடையவர் திரு. ஜி.டி. நாயுடு.

கல்வி பெறும் மாணவர்கள் கவனம்; பாட ஆசிரியரின் கருத்திலேயே வேரூன்ற வேண்டுமே தவிர, சிறு சிறு ஆசா பாசங்களிலோ, அல்லது வேறு எந்த கேலிக்கைகளிலோ திரும்பக் கூடாது என்று அடிக்கடி கூறுபவர் திரு. ஜி. டி. நாயுடு.

பள்ளி உணவு விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் ஊர் சுற்றவோ, திரைப்படம் பார்க்கவோ அல்லது அரசியல் சொற் பொழிவுகளைக் கேட்கவோ போகக்கூடாது என்பது நாயுடுவினுடைய கண்டிப்பான கட்டளை.

ஒரு வேளை மாணவர்கள் அதை மீறுவார்களானால், தயவு தாட்சண்யமின்றி, உடனே அத்தகைய மாணவர்கள் கல்விக் கோட்டத்தை விட்டு நீக்கப் படுவார்கள். பிறகு எந்த பரிந்துரை வந்தாலும் அவர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.