இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மலர் எட்டிப் பறித்தாய் எழில்நாசி மனம் நுகர்ந்தாய் அட்டக் கருங்கூந்தல் அணிசெய்ய வைத்துப்பின் வீசி எறிந்தாய் மிகவாடிச் சருகாகித் தேசு குறைந்தேன் தெருப்புழுதி மிதிபட்டேன் என்ருலும் *Y மெல்விரலில் நீ தொட்ட விஞ்சையின எண்ணியெண்ணி உள்வளரும் உவகையிலே உயிர்தழைக்கும் திருவுடையேன்.