பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழுத்தாங்க ஆனா, பாரு உள்ளேயிருந்து யாரோ ரொம்ப பலமாக இழுக்குற மாதிரி இருந்துதாம் படக்குனு அவங்க புடியிலேயிருந்து பறிச்சுக்கிட்டு பானை உள்ளே போயிட்டுது. மறைந்தே போச்சு என்று அப்பா சிரிக்காமல் பேசினார். புதையலை காத்துக்கிட்டிருக்கிற பூதம் தான் பானையை உள்ளே இழுத்திருக்கும் அது லேசிலே விட்டுக் கொடுத்திருமா? பலி கொடுக்க வேண்டிவரும் என்று பெரியம்மை கூறினாள். பானை எவ்வளவு பெரிசிருக்கும்? ரொம்பப் பெரிசா? என்றும் கேட்டாள். ஆமா. பெரிசாத்தான் தோணிச்சு. உங்க வீட்டிலே முறுக்கும் தேன்குழலும் செய்து வைக்கிற வெண்கலப் பானை இருக்குதே அந்த அளவு இருக்கும் என்று அப்பா சொன்னார். பானை கண்ணிலே பட்டு விட்டது. நிச்சயம் ஒரு நாள் அது கிடைக்கும் என்னைக்கு அகப்பட்டாலும் சரி, என்னை கூப்பிடாம பானையை ஒழிச்சுவச்சிராதிங்க என்று கூறிவிட்டு அவள் போனாள். ஆசையைப் பாரேன் என்று கூறி அப்பா சிரிக்க வேலை செய்து கொண்டிருந்த ஆள்களும் சிரித்தார்கள். அடுத்து அடுத்து இப்படி மூன்று நான்கு தடவைகள் அந்த அம்மாளை வரவழைத்து ஏமாறச் செய்து மகிழ்ந்தார் அப்பா. அவளும் ஒடிஓடி வந்தாள். பிறகு அவளுக்கே புரிந்துவிட்டது, கொழுந்தப்புள்ளெ பொய் சொல்லி நம்மை ஏமாற்றிக் கேலிபண்ணுதாக என்று. அடுத்தமுறை கூப்பிட்டபோது, அவள் வரவில்லை. புதையல் இருந்தா நீங்களே எடுத்துக்கிடுங்க என்று பெரியம்மை சொல்லுதான்னு அப்பாகிட்டே சொல்லிப்போடு என்று அண்ணனை அனுப்பி விட்டாள். விரைவிலேயே சுவர்கள் எழுப்பி, புதிய பகுதிகள் கட்டி முடிக்கப் பட்டன. அப்பாவின் விடுமுறையும் தீர்ந்தது. கோவில்பட்டியிலிருந்து பெருங்குளம் ஊருக்கு மாற்றப் பட்டிருந்தார் அப்பா. ஆகவே, நான் மீண்டும் கோவில்பட்டி போக வேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. 50 வல்லிக்கண்ணன்