பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சிறையிலே தேள்!


ஜெயிலில் நேரு இருந்த போது
நடந்த நிகழ்ச்சியைத்
தெரியும் வகையில் உங்க ளுக்குக்
கூறப் போகிறேன்;
வெயிலின் கொடுமை தாங்கி டாமல்
கொடிய தேள் ஒன்று
மெல்ல அவரின் அறையி னுள்ளே
வந்து சேர்ந்ததாம்!

கண்ட வுடனே நேரு பதற்றம்
கொள்ள வில்லையாம்.
கல்லைத் தூக்கி மேலே போட்டுக்
கொல்ல வில்லையாம்.
"என்ன செய்தார்?” என்று தானே
நீங்கள் கேட்கிறீர்?
எடுத்துச் சொல்வேன்! பொறுமை யாகக்
கேட்பீர் நண்பரே.

44