பக்கம்:பச்சைக்கனவு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற்கடல் O 93

ஆனால் எனக்கே தெரிகிறது; பெண்கள் என்ன, புருஷர்களுக்குந்தான், என்ன சுதந்திரம் இருக்கிறது? எங்களுக்கு வீடு என்றால் உங்களுக்கு உத்தியோகம். பார்க்கப்போனால் யார்தான் விடுதலையாயிருக் கிறார்கள்? எல்லோரும் சேர்ந்து ஒரு பெரும் சிறையிலிருக் கிறோமே, இந்த உலகத்தில்! பணக்காரன் தங்கக் கூண்டில். இந்த இரண்டு ஸ்திதியிலுமில்லாமல் நம்மைப் போல் இருக்கிறவர்கள் இதிலுமில்லை; அதிலுமில்லை; காலை ஊன்றக்கூட ஆதாரமில்லாமல், அந்தரத்தில் தவித்துக் கொண்டிருக்கிறோம். இல்லாவிடில் இந்தச் சமயத்தில் நாம் பி ரி ந் து நீங்கள் எங்கேயோ இருப்பானேன்? நான் ஏங்கி உருகித் தவித்துக்கொண்டு? உத்தியோகத்தை உதறிவிட்டு ஓடிவந்துவிட முடிகிறதா? நான் ஒண்னும் அவ்வளவு அசடு இல்லை. மனஸ்வெச்சேன்னா எல்லாம் எனக்குத் தெரியும். இப்போ மனஸ் வெச்சிருக்கேன்!

ஆனால் அதற்காக என்னோடு பேசக்கூடாது என்று இருந்ததா? போகிற சமயத்தில் என்னிடம் வந்து, 'ஜகதா, நான் போயிட்டு வரட்டுமா?' என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போனால், தலையைச் சீவிவிடுவார்களா? அதையும்தான் பார்த்துவிடுகிறது; என்ன ஆகிவிடும்? சாந்தியைத் தைக்குத் தள்ளிப்போட்டு விட்டாலும் வாய் வார்த்தை கூட பேசிக்கக் கூடாது என்றால் பிள்ளைகள் க லி ய | ண ம் பண்ணிக் கொள்வானேன்? இந்த வீடே வேடிக்கையாய்த்தானிருக் கிறது. நீங்கள் எல்லாம் இப்படியிருக்கிறதால்தானே நாங்கள் எல்லாம் வெட்கம் கெட்டவர்களாகி விடுகிறோம்?

ஆனால் அம்மாவே சொல்லியிருக்கிறாள். கூட்டுக் குடித்தனம் என்றால் அப்படித்தானிருக்கும் என்று. அவளும் சம்சாரி வீட்டில்தான் வாழ்க்கைப் பட்டாளாம். இடம் போதாத வீட்டில் நாலு ஜோடிகள் வாசம் பண்ணனுமானால் என்ன பண்றது? வீட்டுக்கு விருந்தாளி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/102&oldid=590760" இலிருந்து மீள்விக்கப்பட்டது