பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 597

பெற்று வழங்கிய பழக்கங் காரணமாகவும் இசைத் துறையில் மிகவும் தேர்ச்சிபெற்ற ஒது வார்கள் சிலர் தமது இசைத் திறம் விளங்கப் புதியனவாக அமைத் துப் பாடிய இசையமைப்பாலும் மேற்குறித்த பண்களுள் ஒரு சிலவற்றிற்குரிய இராகங்கள் வேறுபட்டன என எண்ணவேண் டியுளது.

தேவாரப் பண்களில் பகற்பண், இராப்பண் என்ற பகுப்புமுறை பழைய பண்முறையினே அடியொற்றி அமைந்திருத்தல் வேண்டும். தேவார ஆசிரியர்கள் தலங்கள் தோறும் இறைவனே வழிபடச் சென்ற பொழுது அவ்வக் கால நிலைக்குச் சிறப்புரிமையுடைய பண்களிலும் திருப்பதிகங்களே அருளிச் செய்துள்ளார் கள். திருஞான சம்பந்தர் திருமறைக்காட்டிலிருந்து பாண்டி நாட்டிற்கு எழுந்தருளி மதுரை யெல்லேயில் நின்று திருவாலவாய்த் திருக்கோபுரத்தைக் கண்டு கைதொழுது போற்றிய நேரம் விடியற் காலமே என்பது பெரிய புராணத்தால் இனிது புலனும். விடியற் காலமாகிய பொழுதுக்குப் பொருந்த அப்பொழுது பிள்ளையார் அருளிய திருப்பதிகம் மங்கையர்க்க சி’ என்னும் முதற்குறிப்புடைய புற நீர்மைப் பதிகமாகும். புற நீர்மை (பூபாளம்) என்றபண், பள்ளியெழுச்சிக் குரிய விடியற் காலத்திற் பாடத்தக்கதென்பது,

பாண் வாய் வண்டு நேர்திறம்பாடக் காண்வரு குவளை கண்மலர் விழிப்ப ’’

(அந்திமாலே - 75, 76) என வரும் சிலப்பதிகாரத் தொடராலும்,

  • வண்டாகிய பள்ளியுணர்த்துவான் புறநீர்மை

என்கின்ற பண்ணேப்பாட, குவளே கண்மலர் போல விழிப்ப ’’ என இதற்கு அரும்பதவுரையாசிரியர் எழுதிய உரைக் குறிப்பாலும் இனிது விளங்கும்.