பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார்த் திருப்பதிகங்கள் む07

என்னும் உருவில் தைவதம் நீங்கலாக எஞ்சி நின்ற சிகிமபந எ ன் னு ம் சுத்தவடிாடவ வுருவத்தைக் காந்தாரப் பண்ணுக்கு உருவமாகக் கொள்ளலாம் எனவும், பாலேப் பெரும்பண்ணின் ஆசான் என்னுந் திறத்தின் அகநிலையாய் 33 என்னும் எண் பெற்ற காந்தாரத்தை நாரத சங்கீத மகரந்தம் கூறிய தேவ காந்தாரத்துக்கு ஒப்பாகக் கொள்ளுமிடத்து ரிகி மிதிநி என்னும் சுத்த ஷாடவ வுருவம் பெறும் எனவும் யாழ் நூலாசிரியர் காரணங்காட்டி விளக்கியுள்ளார்.

46. பழம் பஞ்சுரம்

குறிஞ்சிப் பெரும் பண்ணில் பஞ்சுரம்’ என்னுந் திறத்தின் புறநிலையாய்ப் பண் வரிசையில் 46 என் னும் எண் பெற்றது பழம் பஞ்சுரம் என்ற பண்ணுகும். இது நான்காந் திருமுறையில் 14, 15-ஆம் பதிகங்களி லும், ஏழாந் திருமுறையில் 47 முதல் 58 வரையுள்ள பதிகங்களிலும் அமைந்துளது. இதன் பழைய வுருவம் இதுவென விளங்கவில்லை. பிற்காலத்தார் இப்பண் ண மைந்த பதிகங்களைச் சங்கராபரண ராகத்திற் பாடுதலே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

47. மேகராகக்குறிஞ்சி

இது, குறிஞ்சிப் பெரும்பண்ணின் பஞ்சுரம் ” என்னுந் திறத்தின் அருகியலாய்ப் பண் வரிசையில் 47 என்னும் எண் பெற்றது. இதனே நாரத சங்கீத மகரந்தம் கூறும் மேகரஞ்சி’ என்னும் இராகமாகக் கொள்ளுமிடத்து ம . முதலாகிய மூர்ச்சனேயில் தைவத நிஷாதங்கள் நீங்கிய உருவம் இதன் உருவாகும். ம ப த நி சரி.க என்ற நிரலில் உள்ள த நி என்பன, சரிகம ப த நி என்ற நிரலில் க ம ஆகுமாதலின் அரிகாம்போதி மேளத்தில் காந்தாரம் மத்திமம் நீங்கிய ரிபதிந என்ற சுத்த ஒளடவ வுருவம்