1038
பன்னிரு திருமுறை வரலாறு
" விதியிஞலே பரவிய திருநீற்றன்பு பாதுகாத் துய்ப்பீர் " (மெய்ப் - 22) எனவும்,
"தூய்மைத் திருநீற்றடைவே மெய்ப்
பொருளென்றறியுந் துணிவினர் ” {தகிதத்தி - 5) எனவும்,
"ஆதிமுதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் "
{மூர்க்க - 3} எனவும் திருவருள் வண்ணமாகிய சிது கீற்றின் சிறப்பினை ஆசிரியர் இக்காப்பியத்தில் ஆங்காங்கே விளக்கியுள்ளமை காணலாம். இவ்வாறே சிவசாதனமாய் இறைவனது பேரருளின் வெற்றிக்கு அடையாளமாகிய உருத்திராக்கம் மகவெனப் பல்லுயிரனை த்தையும் ஒக்கட்ப க்கும் செல்வக் கடவுட்டொண்டர்களாகிய சிவனடியார்களுக்குச் சிறப் புடைய அணிகலகைத் திகழும் தன்மையது என்பதனை,
" ஆசங் கண்டிகை ஆடையுங் கந்தையே "
பெரிய திருக்கூட்டச் - 9,
எனவும்,
" தூயவெண் ணிறு துதைந்தபொன் மேனியும் தாழ்விடமும் " (பெரிய - திருநாவுக் - 49, எனவும்,
" திருக்கழுத் தாரந் தெய்வக் கண்டிகை மசிலேசேச "
(:ெசிய-சம்பந்தர் 12141 எனவும்,
" கடிகொள் செங்கமலத் தாதின்
செவ்வி நீள் தாம மார்பர் திருவடையாள ம.ே எவ்வுலகோரும் ஏத்தத்தொழுதுதாம் எடுத்துப் பூண் டார் " (,, 1216) எனவும்,
" மிக்கெழும் அன்பர்கள் அன்பு திருமேனி விளைந்ததென
அக்குமணியாற் சன்ன வீரமும் ஆரமும் வடமும் கைக்கணிகொள் வளைச் சரியும் அரைக்கடி சூத்திரச்சரியும் தக்கதிருக் காற்சசியும் சாத்திய ஒண்சுடன் தயங்க "
(பெரிய - சிறுத் - 32) எனவும் வரும் தொடர்களில் ஆசிரியர் இனிது விளக்கி யுள்ளமை காணலாம்.