பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uလ်)မ္ဘိဒါဧ၏။ * #ါဖစ္or် (13) 137 புகழ் பெரிது! - இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர் 100 நன்பல நன்பல நன்பலவையை - நின்புகழ் கொள்ளாதிம் மலர்தலை உலகே! வையையே! ஆரவாரமும் பழமைச் சிறப்புங் கொண்ட் மதுரைப் பேரூர் மக்கட்கு இன்பமும் அழகுமாகிய நன்மை களைப் பலவாகத் தருகின்றனை. ஆதலால், பரந்த இடத்தை யுடையதான இவ்வுலகும் நின் புகழின் பரப்புக்கு அட்ங்காத தாகும். அத்துணைச் சிறந்தது நின் புகழ் என்பதாம். - சொற்பொருள் : அழுங்கல் - ஆரவாரம், இன்பம் புதுநீர் விழவாடிப் பெறும் இன்பமும், விளையுள் பெருகப் புதுவருவாய் பல பெற்றுக் களிக்கும் இன்பமும், கவின் நீராடிப் பெறும் கவினும்; எங்கணும் பசுமை தோன்றக் காட்சிக்கு இனிமை நல்கும் கவினும் மலர்தலை உலகம் - பரந்த இடத்தை உடைய உலகம். விளக்கம் : வையை மதுரை நகருக்கும் பாண்டியரின் நாட்டுக்கும் வளத்தையும் இன்பத்தையும் தருகின்ற புகழை உடையது என்பதாம். இவ்வாறு பலரும் இன்புற்ற காலத்து நீதான் தன்னுடனில்லாத காரணத்தால், தான் எதனையும் பெறாதாளாகத் தலைவி வாடி நலிந்தாள் என்று, தலைவனுக்குத் தோழி அறிவுறுத்துகின்றனள் என்பதும் ஆம் р = பதின்மூன்றாம் பாடல் திருமால் (18) பாடியவர் : நல்லெழுநியார்.பண் வகுத்தவர் : பெயர் புலப்படவில்லை; பண் : பண்ணோதிறம். துறக்கமும் உரித்தே! மணிவரை யூர்ந்த மங்குல் ஞாயிற்று அணிவனப் பமைந்த பூந்துகில் புனைமுடி இறுவரை யிழிதரும் பொன்மணி யருவியின் நிறனொடு மாறுந்தார்ப் புள்ளுப்ப்ொறி புனைகொடி விண்ணளி கொண்ட வியன்மதி யணிகொளத் 5. தண்ணளி கொண்ட அணங்குடை நேமிமால்! பருவம் வாய்த்தலின் இருவிசும் பணிந்த இருவேறு மண்டிலத்திலக்கம் போல நேமியும் வளையும் ஏந்திய கையாற் - கருவி மின்னவிர் இலங்கும் பொலம்பூண் - 10