பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

༥༠ཨིནྡ༔"་ཆ་མ་ཧཨོཾཆམོ། ༣ ༠༦༠༥༠༠l༅། (6) 81 மலையிடத்தே ஒன்றுபடுத்தும் சிறப்பும் உடையதாகும். நுகர நுகரத் தீராத நுகர்விலே அவர்கள் திளைத்தனர். முற்ற்ாத காதலின்பத்தினை அவர்கள் நுகர்ந்தனர். காதலியர் தம் காதலரது மார்பிடத்து அணைப்பினின்றும் அகலாதவராக மயங்கிக் கிடந்தனர். மலர்களிடத்துத் திரியும் இயல்புடைய மகன்றிற்பறவைகளின் பிரிவற்ற நல்ல கூட்டத்தைப் போன்று, அக் காதலரும், தம்முள் கெடாத மகிழ்ச்சியை என்றும் மறத்தற்கு அறியாத தன்மையில் பெற்று அநுபவிக்க உதவும் சிறப்பினைக் கொண்டது, தண்மையுடைய திருப்பரங்குன்றம் ஆகும். சொற்பொருள் : ஏய- ஏவப்பெற்ற தொழுதி - கூட்டம். முரல்வு - வண்டினத்து ஆரவாரம் கம்பலை - அலரின் மிகுதி. வடுவகிர் மாவடுப் பிளப்பு:பணை-மூங்கில் குறுந்தொடி சிறிய வளை, சிறுவளை அவரது பருவத்து இளமையைக் குறிப்பது. ஆராக் காமம் - நுகரநுகரத் தெவிட்டாத தீராக் காமம். முற்றாக் காதல் - முதிர்ந்து சலிப்பை உண்டாக்காது, என்றும் இளமை யோடு திகழும் காதலன்பு, அடியோர் - தலைவியர். மைந்தர் - வலியாளர், தலைர். மகிழ் - மகிழ்வு; இன்பம். மகன்றில் - ஒருவகைப்பறவை. புலரா - கெடாத சிறப்பிற்று சிறப்பை உடையது. - - விளக்கம் : பிரிந்துறையும் காதலரைத் தம்முள் ஒன்று படுத்தி, ஆராத காதலின்ப நுகர்விலே திளைக்கச் செய்யும் சிறப்பை உடையது தண்பரங் குன்றம் என்பதாம். அவரது துயரைப்போக்கி இன்பத்தைத் துய்க்குமபடியாகத் தானே அளிப்பது என்பதுமாம். காலையும் மாலையும் இனிமன்னும் ஏதிலர் நாறுதி; ஆண்டுப் பனிமலர்க்.கண்ண்ாரோ டாட நகைமலர் மாலைக்கு மாலை வரூஉம், வரைகுள் நின் காலைப் போய் மாலை வரவு: 50 ஒரு தலைவிக்குத் திடுமெனத் தலைவன்பாற் சிறுசினம் உண்டாகிறது. அவன், நின்னைப் பிரியேன்” என்று கூறிப் பிரியத் தொடங்கும்போது, அவள் ஊடிச் சீறுகின்றாள். - “இவ்வேளை, நீதான் மிகவும் ஏதிலரான பரத்தையரின் இன்பத்தை நுகர்ந்து வந்தாயாதலின், அவர் உடலின் நறு நாற்றத்தை நீயும் நாறுபவனாகத் திகழ்கின்றனை காலையில் வீட்டைவிட்டுப் போகும்நீ, மாலையிலேதான் மீண்டும் வருகின் றாய். இடைப்பட்ட நேரத்தே, அவ்விடத்துச் சேரிக்கண் உள்ளாரான குளிர்தாமரை மலர்போலும் கண்களை உடைய