பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47


மற்ற குருவிகளிடம் தாங்கள் பட்ட பாட்டை எடுத்துக் கூறின. அந்த முரட்டுத் திருடனின் அரக்கத் தனத்தைப் பற்றியும், கடலம்மாவின் அன்பு உதவியைப் பற்றியும் அவை விரிவாக எடுத்துக்கூறின.

அந்த மரத்தில் இருந்த மற்ற குருவிகளுக்கெல்லாம் கடலம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

‘எங்களுக்கெல்லாம் கடலம்மாவைக் காட்டுவீர்களா?' என்று அவை ஆவலோடு கேட்டன.

'உறுதியாக கடலம்மா மிக அன்புள்ளவள் நம் எல்லாரையும் ஒன்றாகப் பார்த்தால் மிக மகிழ்ச்சியடைவாள்' என்று அந்தச் சின்னச் சிட்டுக் குருவிகள் கூறின.

மறுநாளே அரச மரத்தில் இருந்தஎல்லாக் குருவிகளும் கடற்கரைக்குப் புறப்பட்டுச் சென்றன.

வான வீதியில் அவை கூட்டமாய்ப்பறந்து செல்வதைக் கண்ட-மற்ற மரங்களிலும், வீடுகளிலும், குடியிருந்த சிட்டுக் குருவிகள் அனைத்தும் இவற்றைத் தொடர்ந்து பறந்தன.