இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காட்டுப் புலி காட்டுப் புலி
வேட்டை யாடுது
கலை மானும் குழி முயலும்
கலங்கி யோடுது!
காட்டுப் புலி காட்டுப் புலி
பாய்ந்து போகுது
கள்ள மில்லா உயிர்க ளெல்லாம்
சாய்ந்து மாயுது!
ஒன்றைக் கொன்றே ஒன்று தின்ன
உலகைப் படைத்தவன்
என்றும் நன்றாய் இருக்க மாட்டான்
எண்ணம் துடிக்குதே!