இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரதியின்
பயன்பாடுகள் யாவை என்று நுணுகி ஆய்வதே இலக்கியத் திறனாய்வு. இவ்வாய்வையும் பாரதியார் தம் இயல்பில் காட்டியுள்ளார்.
- முன்னர்க் காட்டப்பட்ட,
- திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
- ஆழமும் விரிவும் அழகும்”
-என்ற அடிகள் பாரதியார்
திருக்குறளை நோக்கிய ஆழ்ந்த- நுண்ணிய நோக்கைக் காட்டுவன, இதனைத் திருக்குறள் திறனாய்வின் ஒரு பகுதி எனலாம்.
“சிலப்பதிகாரச் செய்யுள்”, “சிலம்பை இசைத்தது” , “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்னும் தொடர்கள் முன்னர் விளக்கப்பட்ட பாங்கில் நோக்கின் இவை சிலம்பு பற்றிய திறனாய்வுத் தொடர்கள் எனஅறியலாம்.
- “எல்லையொன் றின்மை எனும்பொரு ளதனைக்
- கம்பன் குறிகளால் காட்டிட முயலும்
- முயற்சி”
—எனும் அடிகள் கம்பனது உட்கருத்தை
ஆய்ந்து வெளிப்படுத்துவன. இவ்வாறு கம்பனது,
“புவியினுக் கணியாய்” என்னும் செய்யுளை எடுத்து அதன் பின்னிரண்டு அடிகளை வைத்துத் திறனாய்வு செய்யும் பாங்கில் கவிதை இலக்கியத் திறனாய்வைக் காட்டியுள்ளார்:
“சவி என்பது ஒளி; இது வடசொல்; கம்பன் காலத்தில் இது அதிக வழக்கத்தில் இருந்தது போலும்.
68