பக்கம்:பாலும் பாவையும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 உடனே அந்த முதியவளைக் கைகூப்பி வணங்கி விட்டு அகல்யா எழுந்தாள். “எங்கே போகப் போகிறீர்கள்?’ என்று கேட்டான் ராதாமணி. அவள் ஒன்றும் பதில் சொல்லவில்லை; பதில் சொல்ல அவளுக்கு வாயும் வரவில்லை ஏனெனில் அதற்குள் துக்கம் அவளுடைய உள்ளத்திலிருந்து முகத்துக்கு வந்து விட்டிருந்தது; அப்படி வரும்போது அவள் தொண்டையை அது அடைத்து விட்டிருந்தது! அவள் மெளனமாகக் கீழே இறங்கிச் சாலையை நோக்கி நடந்தாள். கடைசி நம்பிக்கையையும் இழந்து, கதியற்றுச் செல்லும் அந்தக் காதல் பைத்தியத்தை ராதாமணியும் அவன் தாயாரும் அனுதாபத்தோடு பார்த்தனர். அவள் தலை மறைந்தது; அந்த நிமிடமே உலக வழக்கத்தை யொட்டி அவர்களும் அவளை மறந்து விட்டார்கள்!