பக்கம்:பாலும் பாவையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இதை அவன் அனுதாபத்தோடுதான் சொன்னான். ஆயினும் அந்தச் சமயத்தில் இது அவளுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாயில்லை. எனவே, "அது அவரவர்களுடைய இஷ்டத்தைப் பொறுத்தது!’ என்று இரைந்து கொண்டே தன் அறைக்குள் நுழைந்தாள் "அப்படியானால் நான் போய்த் தூங்கட்டுமா?” “பேஷாய்த் துங்குங்கள்!” அவன் சென்றதும் என்ன தோன்றிற்றோ என்னமோ, தனக்கு அருகில் கிடந்த தலையணையைத் தூக்கி மடியின்மேல் வைத்துக் கொண்டு, முகத்தைக் கைகளால் பொத்திக் கொண்டு, விம்மி விம்மி அழுதாள். அவளுடைய துக்கத்தைத் தாங்க மாட்டாமல் தானோ என்னவோ, அதே சமயத்தில் வானமும் அவளுடன் சேர்ந்து குமுறிக் குமுறி அழுதது ஆம், அந்தப் பெருமழையின் சத்தத்தையும் மீறி அகல்யாவின் விம் மல் சத்தம் வந்து கனகலிங்கத்தின் ஆண்மையை மீண்டும் மீண்டும் சோதித்துக்கொண்டே இருந்தது. ங்ொய், கொய்' என்று சுழன்று சுழன்று அடிக்கும் ஆடிக்காற்றில் அகப்பட்டுக்கொண்ட துரும்பைப்போல அவன் ஒரு நிலைக்கு வரமுடியாமல் தவியாய்த் தவித்தான்.