பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 l.

சேட்டைகள் செய்வதிலும் . அதனால் அவள் காட்டுகிற ஆனந்தம் உளக் கிளர்ச்சி, உணர்வுச் சலனம் காரணமாக - தடவுகிறவனுக்கு இன்ப உணர்வும் மகிழ்ச்சியும் ஏற்படக் கூடும். அவ்வாறு இனிய சிறு விளையாட்டுக்கு உள்ளா கிறவள் உமது காதலுக்கு உரியவளாகவும், உம்மிடம் ஆசை காட்டுகிறவளாகவும், பிணங்கியும் இணங்கியும் விளை யாடும் இனியையாகவும் இருந்தால், இந்தத் தடவல், நீவல், வருடல் வகையறாக்களின் சுவையும் ரசனையும் அதிகரிக்கும்.

இந்தவிதமாக ரகசியம் பேசியது சிதம்பரத்தின் உள்ளம். நேரமோ நள்ளிரவு. இடம் குறுகலான அறை போன்ற ாயில் பெட்டி. சுற்றிலும் ஆட்கள் உண்டு என்றாலும் அவர்களோ தூக்கத்தால் உணர்விழந்து விட்ட கட்டைகள். எதிரே வசியப்போஸ் காட்டிக்கிடக்கும் பளபளப் பட்டாடை மினுமினு மங்கை. அருகிலே - மிக நெருக்கத்தில் போதிய கவர்ச்சி உடைய இளம் பெண்ணின் துக்கநிலை.

மூடியிருக்கும் அவள் கண்களும், மூடுண்ட நிலையில் தென்பட்ட கை விரல்களும், ஒத்த வளைகளை அணிந்த தந்தநிறக் கையும் அதிகக் கவர்ச்சியுடன் விளங்கின.

இவற்றையெல்லாம் ரசித்துக்கொண்டிருந்த இளைஞ னின் மனம் இஷ்டம்போல் கனவுகளையும் நினைவுகளையும் சிருஷ்டித்துக் களித்தது. எதிர் பெஞ்சில் தூங்கிக் கிடந்த இளம் பெண்ணின் மாம்பழக் கன்னங்களைத்தடவிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை அவன் உள்ளம் விதைத்தது.

மனம் ஒரு குரங்கு என்றால், சிறு குறும்புகள் செய்வது அதன் இயல்பாகத்தானே அமையும். .

ஆனாலும், சிதம்பரம் துணியவில்லை. அவன் து.ாங்கவும் இல்லை. - - .

வண்டி ஒடிக்கொண்டே இருந்தது.