பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307 துச் சென்றனர். பின்னர் அன்றிரவு நாபா சிறையில் அடைத்திருந்தபொழுது, இரவிலும் அந்த விலங்கு அகற்றப்படவில்லை. மறுநாள் முற்பகல் வரை இரண்டு நண்பர்களும், எந்தப் பக்கம் திரும்பினலும், இருவரும் சேர்ந்தே திரும்ப வேண்டியிருந்தது. சிறை யில் எலி, மூஞ்சூறுகளின் தொல்லையாலும் அவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். நாபாவில் நீதி விசாரணையும் ஒரு கோமாளிக் கூத்தாகவே நடந்தது. முதலில் பல நாட்களாக ஒரு மாஜிஸ்திரேட் முன்பு விசாரணை கடந்தது. அந்த மாஜிஸ்திரேட் படிப்பு வாசனை யில்லாதவர். யார் என்ன சாட்சியம் கூறியபோதிலும், அவர் பேனவை எடுத்து ஒரு வரிகூட எழுதவில்லை. அங்கு கடந்த விசாரணை கைதிகள் காபா எல்லேயை விட்டு வெளியே போகாமலிருந்ததற்காக. பின்னல் திடீரென்று வேறு ஒர் அறையில், வேறெருவர் முன்பு விசாரணை தொடங் கிற்று. அது சதியாலோசனைக் குற்றத்திற்காக 1 அங்கே சதி செய்ததாகக் குற்றம் சாட்ட வேண்டுமா ல்ை, எதிரிகள் கான்கு பேர்களாவது இருக்க வேண் டும். அதற்காக அரசாங்கம், ஒரு சீக்கியரையும் கைது செய்து கொண்டுவந்து, எதிரிகளோடு கிறுத்தி வைத் தது 1 முற்றிலும் பொய்யான ஒரு வழக்கும் ஜோடிக்கப் பட்டது. இரண்டு வாரங்களாக வழக்குகளின் விசாரணை கடந்து முடிந்தது. எதிரிகள் எழுத்து மூலமான வாக்குமுலங்களை அளித்தனரே அன்றி, விசாரணை யில் கலந்துகொள்ளவில்லை. இரண்டு வழக்குகளிலும் சேர்த்து எதிரிகளுக்கு இரண்டு அல்லது இரண்டரை வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பெற்றது. ஆல்ை அன்று மாலையிலேயே அந்தத் தண் டனையை நிறுத்தி வைக்கப் பெற்றிருப்பதாகச் சொல்.