பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பூர்ண்சந்திரோதயம்-5

வருவதில்லை. நான் மகாராஜனைப் போல ஆனந்தமாக என் வாழ்நாளைக் கழிப்பதற்கு எனக்கு நீர் அபாரமான பொருளைக் கொடுத்தீர். நான் இதுவரையில் செய்த குற்றங்கள் என்னைத் தொடராமல், நான் நிம்மதியாய் இருக்க, நீர் மன்னிப்பும் வாங்கிக் கொடுக்கிறீர். இவைகள் மாத்திரம் இருந்தால், அது போதுமா? என்னோடுகூட இருந்து இந்தப்பொருளை அனுபவிக்க அழகான ஒரு பெண்ஜாதியையும் நான் சம்பாதித்துக்கொள்ள வேண்டுமென்பது என்னுடைய அவா. நேற்று நான் உம்முடைய மகளை என் வீட்டுக்குக் கொண்டு போயிருந்த காலத்தில், அவள் இனி எப்போதும் என்னோடு கூடவே எனக்குப் பெண் ஜாதியாக இருக்கப் பிரியப்படுவதாகச் சொல்லி வாக்குக் கொடுத்தாள். அதைக் கேட்டபிறகு என் மனசில் அடக்கமுடியாத ஒருவித ஆசை உண்டாக்கிய அந்தப் பெண் திருட்டுத்தனமாக வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்டாள். இவளை எப்படியாவது அழைத்துக்கொண்டு போய், இவள் சொன்ன வாக்குறுதிப்படி நடந்துகொள்ளச் செய்ய வேண்டு மென்பது என்னுடைய தீர்மானம். அதற்காகவே நான் இப்போது இங்கே வந்தேன். வந்து கூப்பிட்டால், இவள் இல்லாத ஆட்சேபனைகளை எல்லாம் சொல்லி மறுக்கிறாள். தான் என்னிடமிருப்பதாக இவள் வாக்குறுதி செய்து கொடுத்த பிறகு, அந்த மாதிரி நடக்கத் தவறலாமா? அப்படித் தவறினால் நான் விட்டுவிட முடியுமா? ஆகையால் நீர் இவளுக்குப் புத்திமதி சொல்லி, இவளையும் என்னோடுகூட அனுப்பிவிடவேண்டும். இதுதான் இரண்டாவது காரியம். இவ்வளவுதான் நீர் செய்ய வேண்டியது. இதற்குமேல் வேறே எதுவும் தேவையில்லை. ஒழுங்காக நீரே இந்தப் பெண்ணை என்னோடு அனுப்பிவைக்கா விட்டால், அவள் என் வலையிலிருந்து ஒருநாளும் தப்ப முடியாது. நான் எப்படியும் அவளை அபகரித்துக்கொண்டு போவது நிச்சயம். ஆகையால் அவள் தடியடி பெறாமல், தானாகவே கனிந்து வரும்படி செய்வீரென்று நம்புகிறேன்: எனறான,