பக்கம்:பொன் விலங்கு.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 687

தெளிந்த நீரோடை போன்ற சரளமான நடையில், தமிழ் மணம் கமழ, நவயுகக் கருத்துக்களை முன் வைத்து நல்லதோர் இலக்கியத்தைப் (பொன் விலங்கை) படைத்துத் தந்த ஆசிரியர் மணிவண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

O 23.3.64 ஏரல்.எஸ்.ஏ சலாம், தனுஷ்கோடி

தென்னாட்டிலே மனித குலத்தில் இறுதி முடிவு வரை அரவிந்தன்களும் சத்தியமூர்த்திகளும் ஆசிரியர் மணிவண்ணனின் உருவிலே மூலைக்கு மூலை தமிழ் மொழியின் புகழை மேன்மேலும் பரப்ப உதவுவார்கள் என்பதிலே ஐயமில்லை.

பெரிய பெரிய பண்டிதர்களால் கூடக் கூற முடியாத அரும்பெரும் தத்துவங்களையும், கலையுணர்ச்சிகளையும் மிக மிக எளிதாகப் பாமரரும் அறியும் வண்ணம் அழகுத் தமிழிலே இந்த நாவல் வடிவிலே அளித்துவிட்டார் மணிவண்ணன்.

O டி.டி.துரைராசன், மேற்கு மாம்பலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/689&oldid=595960" இலிருந்து மீள்விக்கப்பட்டது