பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப் புரை மகாகவி பாரதியார், தமிழ் நாட்டு இலக்கிய உலகத்திலும், பத்திரிகை உலகத்திலும், சுதந்திரப் போராட்டத்திலும், சமுதாய முன்னேற்றச் சிந்தனை களிலும் ஒரு புதிய, உத்வேகமான சகாப்தத்தை உருவாக்கியவர். எந்தத் துறையானலும், அந்தத் துறையிலே புது எழுச்சியை வித்திட்டுப் பயிர் செய்த பெருமை பாரதியாருக்கு உண்டு. மகாகவி பாரதியாரின் விடுதலை வேட்கையின் ஆழத்தையும் வேகத்தையும், அவருடைய ஆன்ம உயிரோட்டமாக அமைந்து எங்கும் பரவி, இவரது பேச்சிலும் எழுத்திலும், கவிதைகளிலும் கட்டுரை களிலும் ஒளி வீசிய புத்துணர்வையும், புதிய கண்ணுேட்டத்துடன் தமிழ் அன்பர்களுக்கு அறிமுகம் செய்கின்ருர் திரு. சக்திதாசன் சுப்பிரமணியன் அவர்கள். எழுத்துத் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் பரந்த அநுபவமும் முதிர்ச்சியும் பெற்றவர் இவர். தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்களிடம் பல ஆண்டுகள்.பயிற்சி பெற்றவர். விடுதலைப் போராட்ட