பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

யாகும். அதாவது, நைசர்ப்பன், பாண்டுகன், பிங்கலன், மகாபத்மன், காலன், மகாகாலன், மானவன், சங்கன் என்னும் எட்டு தெய்வங்களாகும். இவ்வாறு, கலையறிஞர்களாகிய சிற்பிகள், எட்டு தெய்வ உருவங்களையும் எட்டு பூதங்களையும் சிற்பத்தில் சித்திரித்து எட்டு நிதிகளைக் காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு நிதிக்கும் ஆயிரம் பூதம் வீதம் எட்டு நிதிகளுக்கு எட்டாயிரம் பூதம் காவலாக இருந்தன. ஆனால், சிற்பத்தில் எட்டாயிரம் பூதங்களைக் காட்டினால் நன்றாக இருக்குமா? இராது. ஆகையினால், 8 நிதிக்கு 8 பூதங்களை மட்டும் காட்டியிருக்கிறார்கள், இவ்வாறு 8 நிதிகளை 8 பூத உருவத்துடனும் 8 ஜதை தெய்வ உருவத்துடனும் சிற்பிகள் அழகாகக் காட்டியிருக்கிறார்கள், இப்படியில்லாமல் வேறு எப்படி நிதிகளக்காட்டமுடியும். எட்டு நிதிகளின் தலைவர்கள் சிற்பத்தில் ஆகாயத்தில் பறப்பதுபோல ஏன் காட்டப்பட்டனர் என்றால், அவர்கள் மானிடர் அல்லர், மானிட்ருக்கு மேற்பட்ட தெய்வச் சத்தியுள்ள தேவர்கள் என்பதைக்காட்ட இவ்வாறு சிற்பத்தில் அமைக்கப்பட்டனர். இந்தச் சிற்பத்திலேயே வேறு நான்கு உருவங்கள் காணப்படுகின்றன. இந்த உருவங்கள், ஆகாயத்தில் பறப்பது போன்று இல்லாமல் தரையில் நிற்பது போன்றும், கையில் சில ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டும் காணப்படுகின்றன. தரையில் நிற்பது போல் காணப்படுவதால், இவை மனித உருவங்களாகும். இவை எதனைக் குறிக்கின்றன? சகர சக்கரவர்த்தி கண்டப்பிரபாத மலைக்குச்சென்று நோன்பு நோற்றபோது அவருடன் போயிருந்த மந்திரிகளைக் குறிக்கின்றன. இங்குக் காணப்படுகிற சிங்கம், புலி, மான் முதலிய உருவங்கள் தண்டப்பிரபாத மலையைச் சேர்ந்த காடுகளை நினைவூட்டுகின்றன.

படம் 3 காண்க, இது மகாபலிபுரத்துச் சிற்பத்தை, எதிர் நின்று பார்ப்பவருக்கு வலக்கைப்புறத்தின் மேற்புறக் காட்சியாகும், இது ஒன்பதாவது இரத்தினமாகிய சர்வ ரத்தினம் என்னும் நிதியைக் குறிக்கிறது. இந்நிதியிலிருந்து கிடைக்கிற ஜீவரத்தினங்கள். ஏழு அஜீவரத்தினங்கள் ஏழு ஆக பதினான்கு இரத்தினங்களையும் இப்பகுதி பற்பல உருவங்களாக விளக்கிக்காட்டுகிறது. மற்றும் இசை முதலியவற்றையும் கின்னர உருவங்கள் முதலியவற்றால் வெளிப்படுத்துகின்றது. எனவே, 2-ஆவது 3-ஆவது படங்கள் சகரசக்கரவர்த்தி நோன்பிருந்து நோற்றதையும் அவர் அடைந்த ஒன்பது வகையான நிதிகளையும் உருவகவாயிலாக வெளிப்படுத்துகின்றன.

படம் 4 காண்க, இதில் ஒரு கோயிலும் அதன் எதிரில் ஒரு முனிவர் அமர்ந்து செவி சாய்த்துக் கேட்பது போன்றும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கயிலாய மலையில் பரதச் சக்கரவர்த்தி அமைத்த ரிஷபதேவர் கோயிலையும், அக்கோயிலுக்கு எதிரில் பரதச் சக்கரவர்த்தி தமது உருவத்தை, ரிஷபர் செய்யும் உபதேசத்தைச்