பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

செவிசாய்த்துக் கேட்பது போல அமைத்திருந்ததையும் (பரதச் சக்கர வர்த்தியின் உருவத்தையும்) குறிக்கின்றன. (கோயிலுக்கு எதிரில் உள்ள பரதச் சக்கரவர்த்தியின் உருவத்தை ரிஷி என்று தவறாகத் தற்காலத்தில் கருதுகிறவர்கள் உண்டு. பண்டைக்காலத்தில் அரசர்களும் சக்கரவர்த்திகளும் தாடி மீசை தலைமயிர்களை நீட்டி வளர்த் திருந்தனர். இதற்குப் பௌத்த நூல்களிலும் ஜைன, நூல்களிலும் சான்றுகள் உண்டு. சிற்ப உருவங்களின் சான்றுகளும் உள்ளன.) இந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஆறுபோன்ற காட்சியும் அதில் நாகர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. இதைக் கங்கையாறு என்று தவறாகக் கருதுகிறார்கள். இது ஆறு அன்று. சகர குமரரர்கள், கோயிலைச்சுற்றிலும் தோண்டிய அகழியின் ஒரு பகுதியை இச்சிற்பம் காட்டுகிறது. இதில் காணப்படுகிற நாகர்கள், ஜூவலனப்பிரபன் என்னும் நாகராசனும் அவனுடன் வந்த அவன் மனைவி, மந்திரி முதலியவர்களும் ஆவர். பாதாளம் வரையில் அகழிதோண்ட. அதனால், நாகர்களுக்குத் துன்பம் உண்டாக, அப்போது சினங்கொண்ட. நாகராசன் சாகரரிடம் வந்து அவர்களை எச்சரித்த செய்தியை இப்பகுதி குறிக்கிறது.

இனி, கோயிலுக்குப் பக்கத்தில் தலையற்ற மூன்று மனித உருவங்களும், அதற்கு எதிர்ப்புறத்தில் யானைகளின் உருவங்களும் காணப்தைக்குறிக்கிறது என்பதைப் பார்ப்போம், தலயற்ற மூன்று உருவங்கள், நாகராசன் கோபப் பார்வையினால் இறந்துபோன சகர குமாரர்களைக் குறிக்கிறது. சகரகுமாரர்கள் அறுபதினாயிரவரையும் சிற்பத்தில் அமைத்துக் காட்ட முடியாதாகையினால், மூன்று தலையற்ற உருவங்களாச் சிற்பிகள் காட்டியுள்ளார்கள். தலையற்ற உடலாக அமைத்து இறந்து போனார்கள், என்பதைச் சிற்பிகள் காட்டுவது அவர்களின் நுண் அறிவைப் புலப்படுத்துகிறது. தமிழில் ஒருமை பன்மை என்று இரண்டு எண்கள் மட்டும். இலக்கண நூலில் கூறப்படுகின்றன.

வடமொழியில் ஒருமை, இருமை, பன்மை என்று மூன்று எண்கள் இலக்கண நூலில் கூறப்படுகின்றன,

வடமொழி முறையைப் பின்பற்றி, சகர குமாரர்கள் பலர் என்பதைக்குறிக்க மூன்று உருவங்களாக அமைத்தனர் போலும். சிற்பத்தில் இவ்வளவு நுட்பமாகவும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் காட்டப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. இச்சிற்பத்தில் காணப்படும் யானைகள் ஜுவலனப்பிரபன் என்னும் நாகராசனையும் அவலுடன் வந்த நாகப் பரிவாரங்களையும் குறிக்கிறது. பெரிய யானை (நாகராசன் )கோபித்துப் பார்ப்பது போலக் காணப்படுகிறது. இதன் பார்வையினால், சகர குமாரர்கள் இறந்து மாண்ட செய்தி, கோயிலுக்குப் பக்கத்தில் தலையற்ற உடலோடு உள்ள (மூன்று உருவங்களில்) காட்டப்பட்டிருக்கிறது.