பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்பு வேதாரணியம், திரு. A. J. அனந்தராஜய்யன் முதலியார் அவர்களைத் தோழர் திரு. T. S. ஸ்ரீபால் அவர்களுடன் தற்செயலாகச் சந்திக்க நேரிட்டது. அச்சமயம், இந்தச் சிற்பத்தைப் பற்றிய செய்தியை ,முதலியார் அவர்கள் அறிந்தார்கள். உடனே, தமது சொந்தச் செலவில் இந்நூலை அச்சிட்டு, வெளியிடுவதாகக் கூறி அவ்வாறே இதனை வெளியீட்டுதவினார்கள். முதலியார் அவர்கள் இதனை வெளியிட்டிராவிட்டால், இந்நூல் வெளிவராமலே மறைந்திருக்கும். இதன் பொருட்டு, கலையார்வம் உள்ள இப்பெரியாரைப் பராட்டுவதோடு, எனது வணக்கத்தையும் நன்றியையும் செலுத்துகிறேன். தமிழுலகம் இப்பெரியாருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

மகாபலிபுரத்துச் சிற்பக்கலை போன்று, வேறுபல சிற்பங்களும் ஓவியங்களும் நமது நாட்டில் இருக்கின்றன. தமிழ் நாட்டின் கலைச் செல்வத்திற்கு அளவில்லை. அவற்றின் அருமை பெருமை வெளிப்படும்நாள் என்னாளோ? அக்கலைக் காட்சிகளைக்கண்டு நமது நாட்டு மக்கள் இன்புறும் நாள் எந்நாளோ? பழைய கலைச் செல்வங்களை அழியவீட்டுப் புதிய புதிய கலைச் செல்வங்களை உண்டாக்குவது அறிவுடைமையாகாது. பழைய கலைச் செல்வங்களைச் காப்பாற்ற வேண்டும், போற்ற வேண்டும். அதோடு புதிய புதிய நவீன கலைச் செல்வங்களையும் உண்டாக்கவேண்டும். பழைய கலைப் பொக்கிஷங்களை நாம் போற்றிப் பாதுகாக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. இனியேனும் போற்றிப் பாதுகாப்போமாக.


மலரகம்,
மயிலாப்பூர்.
சென்னை
சீனி. வேங்கடசாமி.