பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35

அந்தப் பரம்பரையிலே வந்த உங்களுக்கு மட்டும் வீரமும், தைரியமும் இல்லாமப் போயிடுச்சா??? என்று ஆவேசம் வந்தவரைப் போல் கேட்கவும், கூடியிருந்த அத்தனை பெண்களும்

'இருக்கு எஜமான்... இருக்கு. இப்பவே சொல்லுங்க எஜமான்; நாங்க என்ன பண் ண ணும்?’ என்று உணர்ச்சி பொங்கக் கேட்டனர்.

இந்தக் காட்சியைக் கண்டு மனம் பூரித்துப் போனார் பலவேசம் பிள்ளை. அவர்களை நோக்கி, அமைதியாக இருக்கும்படிக் கையமர்த் தியபடி, மிகவும் நிதானமான குரலில் கூறினார்:

உங்களை யெல்லாம் நான் இப்போ போருக் குப் போகச் சொல்லலே; உங்க புருஷனுக்கு எதிரா உங்களைத் துாண்டு விடவும் நான் இங்கே வரல்லே, ஆனா... நீங்க நல்லபடியா, உங்க புஷன் கிட்டே நடந்துக் கிட்டு; அவங்க நிதானத் திலே இருக்கிற போது, இதமா, பக்குவமா, அவங்க கிட்டே இருக்கிற நல்ல குணங்களை எடுத்துச் சொல்லி; அவங்க மனசிலே இரக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் அவங்களை உங்கவழிக்கு கொண்டு வரணும்.’’

உடனே ஒரு பெண், அவங்க கிட்டே ஏதுங்க நல்ல குணம்? எல்லாம் செவிடன் காதிலே ஊதர சங்கு மாதிரித்தான்?’ என்றாள். -