பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

63

யின் முன்னால் குட்டிச் சாத்தனைப்போல் வரிசை யாக வைத்திருந்த கள்ளுப்பானைகளையெல் லாம் தன் கையிலிருந்த கொடிக்கம்பினால் ஓங்கி அடித்து நொறுக்கினாள்.

அவ்வளவுதான்

பூவாயியின் இந்தச் செய்கையைக் கண்ட கூட்டத்துப் பெண்கள் அனைவரும், மறுகணம் கடைக்குள் புகுந்து நிமிஷ நேரத்தில் தும்சம் செய்து விட்டனர்.

பானைகள் அத்தனையும் உடைத்தெறியப் பட்டு, தரையெங்கும் 'கள்’ளாறு ஒடிக் கொண் டிருந்தது. கடையிலிருந்த பெஞ்சுகள், தாறு மாறாக நொறுக்கப்பட்டு, அந்த வெள்ளத்தில் மிதந்தன.

இமைக்கும் நேரத்தில் இத்தனையும் நடந்து முடிந்து விட்டன. ---

பிரமித்துப் போய் நின்ற காடையன், அந்த எல்லையை விட்டே வெகு தூரம் சென்று விட் டான். அவன் தன் னுடைய கோபத்தையெல் லாம், பண்ணை ஆட்களிடம் கொட்டி, வாய்க்கு வந்தபடி ஏசிக் கொண்டிருந்தான்.

து! நீங்கள்ளாம் ஒரு ஆண்பிள்ளைங்களா? பொம்பளைய அடக்கத் தெரியாதா பேடிங்களா.. நிமிஷ நேரத்திலே ஆயிரம் ரூபாய் கள்ளும்,