பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜபாளையம் போல நாட்டு நாய்தான்! இன உணர்வுள்ள நான் நம் நாட்டு நாயினம் என்று இதை இல்லத்தில் வளர்த்தேன். காலை எழுந்ததும் காலைச்சுற்றி வரும். மாலை வந்தால் என்முன் மண்டியிட்டு உட்காரும் ரொட்டித் துண்டுக்காக. உடல் நிலை காரணமாக நான் - பிரியாணி சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் ஆனால் - வாரம் இருமுறை இதற்கு பிரியாணி உண்டு. என் மனைவிக்கு சிகைக்காய் குளியல்தான் ஆனால் இதற்கு ஷாம்பூ குளியல்! காலையில் என் பின்னால் கம்பீர நடைபோடும் காவலுக்கு என் பின்னால் காரிலும் பவனிவரும் காவல் நேரத்தில் நின்றபடி கண்ணயரும் அரச மரியாதையோடு வளர்க்கப்பட்ட இந்த தாய்க்கு கவிஞர் முருகுசுந்தரம் - 62