பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா

222



கிடைத்து விட்டார் என்பதையும் இந்தச் சமயத்தில் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது காதலை அந்தத் தீரனுக்கு வழங்கிவிட்டேன். உங்களுக்கு என் அநுதாபங்கள். இதற்கு உங்களிடமிருந்து பதில் எதுவும் நான் எதிர் பார்க்கவில்லை. தயவு செய்து பதில் அனுப்ப வேண்டாம். அது தேவையும் இல்லை .

இப்படிக்கு ,

உங்கள் சிநேகிதியாக இருந்த


சுலட்சணா



“நீ போகலாம்ப்பா-கனகராஜ் தளர்ந்த குரலில் அறைக்கு வெளியே காத்திருந்த பையனிடம் கூறினான். மெஸ் பையன் தலையைச் சொரிந்தான். கனகராஜ் மணி பர்ஸைத் திறந்து ஒர் இரண்டு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினான். பையன் அதை வாங்கிக்கொண்டு தாராளமாக ஒரு சலாம் வைத்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான். ” ஏற்கெனவே மறுபடி திரும்பி அங்கே வருகிற நோக்கோடு அரைகுறையாக ஒழித்திருந்த விடுதி அறையை இப்போது முழுமையாக ஒழிக்கத் தொடங்கினான் கனகராஜ். மறுபடி பதினைந்து நாட்களில் திரும்பி அங்கே வருகிற, நோக்கம் இனி அவனுக்கு இல்லை.

என்ன ரெடியாகிக்கிட்டிருக்கியா? கீழே கார் வந்து. நிக்கிது'-என்று சொல்லிக் கொண்டே சுகவனம் வந்தான். சேலத்தில் அவனது வீட்டில் பெற்றோருக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்ப வேண்டியிருந்தது. அதைக் கனகராஜ் - மூலமே கொடுத்தனுப்பிவிட எண்ணிக் கடிதத்தை எழுதி எடுத்துக்கொண்டு வந்திருந்தான் சுகவனம்.

ஒன்றும். பேசாமல் சுகவனம் தந்த கடிதத்தை வாங்கிக் கொண்டான்.கனகராஜ்.