பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எண்ணும் எழுத்தும்

ஒலித்து ஒலித்து உருவம் கொடுத்து
வரி வடிவென்ற வழக்கிற்கு வர
முதற்கண் பொருளின் வடிவைப் பொறித்தான்
சித்திர எழுத்தென்று செப்பினர் முன்னோர்
சீனர் முறையும் அந்த சித்திர வகுப்பே
செந்தமிழன் வகுத்தது கண்ணெழுத்து
கண்ணெழுத்து வளர்ந்து கல்லெழுத்தானது
ஒட்டு உடைவு வளைவு நெளிவுகளை
ஒழுங்கு படுத்தி வெட்டெழுத்தாக்கினான்
வட்டெழுத்தென்ற வடிவுக்கு வந்தான்
ஏடுதிருத்தினான் எழுத்தாணி பிடித்தான்
நெட்டெழுத்தாகி நெடுங்கணக்கானது
யவனர் எழுத்தும் தமிழினத்துச் சாயலே
எழுத்தில் சிறந்தான் எண்ணத்தில் உயர்ந்தான்
மண்ணிலும் வளம்பார்த்து வகுத்தான்
தெங்கம் மதுரை முன்பாலை பின்பாலை
குன்றம் குணகரை குறும்பனை என்று
நாற்பத்து ஒன்பது நாடுகள் ஆயின
எழு நூற்றுக் காவதம் இடம் கொண்டதென்றார்
காவதத்திற்கும் கணக்குண்டு சொல்லிவைத்தார்
அணுக்கள் எட்டுகொண்டது ஒரு தேர்த்துகள்
தேர்த்துகள் எட்டுகொண்டது பஞ்சிழை
பஞ்சிழை எட்டுகொண்டது மயிரிழை
மயிரிழை பட்டுகொண்டது ஒரு மணல்

17