பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாக்களினத்தில் வகைப்படுத்தி குரக்கென்றார்
முன்னைச் சோழன் ஒருவனுக்கு நெடியதாடை
அனுமச்சாயல் முசுகுந்தன் என்றனர்
கிராங்கனூர் என்னும் கேரளமூதூர்
குரங்கினூர் என்பதின் திரிபென்பார்
முசு என்பதிலிருந்து பிறந்ததே முசிரி
சேரன் கரையிலும் சென்னி வளநாட்டிலும்
இன்னும் பலஊர் இந்தப்பேரில் உண்டு
அனுமனின் அன்னை அஞ்சனைப் பெயரால்
வழங்குவதே சேரத்து அஞ்சைக்களம் என்ப
லெமூரின் வழிமுறைக்கு இவையும் சான்றே.

45