பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 அச்சுதனின் தலே கிறுகிறுத்தது. பார்த்தும் பாராதவன் போலப் பாபா வென்று தன் அலுவல்களைக் கவனித்துக்கொண்டிருந்தான். ரெயில் சென்றதும் அறிைக் கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு அவளே நோக்கிச் சென்ருன், - அழகாகத் தோன்றும் காளைகளிற் சில வண்டிச் சவாரிக்கு உதவுவதில்லை. லட்சணங்களுடன் கூடிய பசுக்களிற் சில கற வைக்கு நிற்பதில்லை. பார்வையின் எல்லேக்கும் பயன்படும் எல் லேக்கும் எட்டு எணி வைத்தாலும் எட்டாத அநேக விஷயங்களைப் போலவே இந்தப் பெண்மணியின் விஷயமும் இல்லாதிருக்க வேண்டுமே என்று தெய்வத்தைப் பிரார்த்தித்துக்கொண்டே சென்றன். ஆம். நிஜ பக்தனும் தெய்வத்தை வேண்டுகிருன்: திருடனும் தெய்வத்தை வேண்டுகிருன் அல்லவா? ஆஇல் அவன் கவலைப் பட்டபடி அத்தனே கடினம் உள்ள வளாக இல்ல்ே ராஜம். பேதையாகத்தான் தென்பட்டாள். அதைக் கண்ட அச்சுதனுக்கு உள்ளம் கிளுகிளுத்துப் போயிற்று. "சரி, கமக்கு இன்று ஒரு சரியான வேட்டை கிடைத்தது என்று. மனத்துள் எண்ணிக்கொண்டான். வெகு நயமாக அவளுடன் பேசி அவளேத் தன் அறைக்கு அழைத்துச் சென்று வேண்டிய உதவிகளைச் செய்வதாக வாக்களித்து அப்படியே செய்வது போலும் கடித்தான். அம். வெறும் நடிப்புத்தான் எல்லாம். தந்தியில் யாருடனுே பேசுவது போலப் பாவனை செய்ததெல்லாம் அவளை ஏமாற்றத்தான். அந்த லயனில் உள்ள யாரோ ஒரு முக்கிய உத்தியோகஸ்தருடன் பேசி ராஜம் செளகரியமாகச் சென்னே சென்று அங்கிருந்து பம்பாய் செல்வதற்கான ஏற்பாட் டைச் செய்துவிட்ட ஒரு நம்பிக்கையை அவள் மனத்திலே பதிய வைத்தான். தந்திரமாக முதலிலேயே அவளிடம் இருந்த டிக்கட்டை வாங்கிக்கொண்டான். பிறகு அந்த ரெயில்வே உத்தியோகஸ் தருக்கு லஞ்சம் கொடுக்கிற முறையிலே ஏதோ சாமான் வாங்கிக் கொடுக்க வேண்டிய கிர்ப்பந்தம் இருப்பது போலவும், அதற்கான பணம் தன் கையிலே இல்லாதது போலவும் ஒர் அபிப்பிராயத்தை யும் ஏற்படுத்தி அவளிடம் எஞ்சி இருந்த எட்டு ருபாய் பணத்தை யும் பிடுங்கிக்கொண்டான். அவள் தன் உதவியின்றி எங்கும் திப்பிச் செல்ல இயலாதவாறு இப்படி சில காரியங்களைச் செய்து விட்டு அவளே அந்த அறையிலே இருத்தி வெளியே சென்றன். இருக்கும் மாதிரியைப் பார்த்தால் சுலபமாக இனங்கி விடு வாள் என்றுதான் தோன்றுகிறது. அப்படி இணங்கி விட்டால் சிவனே என்று வீட்டோடு கொண்டுபோய் வைத்துக்கொண்டு விடுவோம். கேட்பவர்களுக்கு இவள்தான் என் தங்கை என்று சொல்லி விடலாம். அவ்வாறன்றி அவள் முரண்டினல் பலவந்த மாக இணங்கப் செய்து விடுவது. இந்த இடத்திலே எனக்கு