பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னீடு

என்னைப் பண்படுத்தியவை புத்தகங்கள். அடுத்துத் தோழர் தங்கப்பா போன்ற நண்பர்கள். படிக்கத் தெரிந்த காலத்திலிருந்தே நான் ஒரு புத்தகக் காதலன். என் புத்தகக் காதலிகள் பன்முகம் கொண்டிருந்தாலும் அன்பொளி உடையவர்கள், நட்புணர்வு மிகுந்தவர்கள், ஒரு செர்ல்லில் சொன்னால் உண்மையானவர்கள்.

கரடு முரடான காளைப் பருவத்தில் கால் வைக்கும் மூன், என் கையில் கிடைத்தது, நாட்டு விடுதலைக்குத் தன் உடல் பொருள் ஆவி மூன்றையும் ஈந்த வ. உ. சிதம் பரனாரின் அகமே புறம்’ என்ற சேமசு ஆலனின் மொழியாக்க அரிய நூல். எனக்குக் கிடைத்த திருக்குறள் தொகுப்புரையும் வாழ்வியக்கத்தின் பேருரையும் அதுதான்். பள்ளி இறுதி முடிந்ததும் 1950-இல் சேம்சு ஆலனின் ஆங்கில நூல்கள் அனைத்தும் ஒருசேர நடைபாதையில் பெற்றேன். அந்தக் காலத்தில்தான்் கா, அப்பாதுரை யாரும் ஆலனின் சில நூல்களை மொழியாக்கம் செய்தார். ஆலனின் பாதி நூல்கள் வந்தன, எனினும் இப்போது மதிப்பில் இல்லை.

மொழியாக்கம் செய்யப்படாத நூல்களை மொழி பெயர்க்க எண்ணிய காலத்தில் சேம்சு ஆலனின் மனக் கருத்தெல்லாம் திரண்ட அன்புருவாய்த் தோழர் தங்கப்படி கிடைத்ததால் அவரையே என் உயிர்ப்பியக்கக் காதலி யாகக் கொண்டேன். ஆதலால் மொழியாக்கப் பணியில் கடுபடவில்லை. r