பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

நெஞ்சடைப்பு ஏற்பட்டுத் தவித்த வேளையில் (3-7-95) மருத்துவமனையில் சேர்த்துதவியரும் அவரே. அறுவைப் பண்டுவதற்கு முன், எனக்குரிய குருதி கிடைக் காமல் காலம் தாழ்ந்தபோது சேம்சு ஆலனின் தெய்வீகத் தோழன் (Divine Companion) என்ற நூலைக் கொண்டு வர என் மனைவியிடம் கூறினேன். ஒரு விடியலிலேயே படித்து முடித்த அந்த நூலை, தங்கப்பா அருகில் இல்லாத நிலையில் அருள் திரு தயானந்தன் என்னைக் காணவும் நான் நலம்பெற வேண்டியும் வந்தார். மறுநாள் தெய்வீகத் தோழன்-நூலை மொழி பெயர்க்கத் தொடங்கினேன். அருட்oசல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அரவணைப்பும் கிடைத்தது. நூல் ஒரு வாரத்தில் முடிந்தது.

என் உடன்பிறவாத் தம்பி வையங்காத்த பெருமான் (முனைவர். சாமி சகத்ரட்சகன்)ஓரிலகத்திற்குமேல் செலவு செய்து மருத்துவப் பேரறிஞர்-பரிவிரக்க மிக்க திரு. தணிகாசலனார் கண்காணிப்பில் அரிய உயரிய டிருத்துவர், களால் புத்துயிர் பெறச் செய்தார், காலத்தால் செய்த உதவி ஞாலத்தினும் பெரிதன்றோ?

படுக்கையில் இருந்தபோதும் என் தலையணைக் கீழே இந்த வெற்றிமேல் வெற்றிபெற-தெய்வீகத் தோழன் உடனிருந்தான்். என் நண்பரும்-நல்ல நூல் வெளியிட் டாளருமான திரு. பாலகிருஷ்ணன் நூலை வெளியிடு வதாகக் கூறினார். என் புத்தகக் காதலியின் உள்ளொளி கற்பவர் மனத்துள் புத்துணர்ச்சியையும் புத்தெழுச்சியையும் உண்டாக்கட்டும்.

நந்தம்பாக்கம் அ. நி. அன்பன் சென்னை-600 069. த கோவேந்தன்