64 வெற்றி மேல் வெற்றி பெற.
அவையே எல்லா அல்லல்களுக்கும் மூல காரணங்கள் துன்பமும், துயரமும் அமைதியின்மையின் ஊற்றே. எனவே, என்னிடத்தில் வந்து தங்கிவிடு.
மாணவன் : உண்மைக்கான வழியை எனக்குச்சுட்டிக் காட்டுவிட்டீர்கள்,
தன்னலம் போக்குவதற்கான புனிதவழியையும் காட்டி விட்டீர்கள். அதன் வழியே நான் நடப்பேன்.
ஓ! உண்மையின் ஆசானே! எனது தீர்மானம் உங்களில் பதிந்துவிட்டது.
ஆசையை வீசிவிட்டு, உங்களைப் பற்றிக்கொள்வேன்;
.ெ எடிய பாழ் உணர்ச்சிகளுக்குச் செவி சாய்க்காமல் தங்களது குரலை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பேன்;
எனது வேட்கையை நாடிச் செல்லாமல் தங்களது புனித அறமுறைக் கட்டளைகளுக்குப் பணிவேன்!
ஆம். எனது அடிகளைத் தாங்கள் காட்டிய நெறியில் பதித்துவிட்டேன்.
தங்கள் தொண்டனாக என்னை, ஒளியையும் அமைதி யையும் காண வழி நடத்திச் செல்லுங்கள்.
ஆசான் : ஒ அன்பனே! நேர்மையான வழிக்குள் நீ வந்து விட்டாய்;
அறிவைப் பெறும் வழியில் உனது அடிகளைப் பதித்து விட்டாய்;
எனவே பொது அறமுறைக் கட்டளைகளை நன்கு, அறிந்து கொள்.
அறிவொளி உன்னை ஒளி மயமாக்கும்.