இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
141✽
ஜேம்ஸ் ஆலன்
மெய்யறிவு ஒரு மனிதனை ஒன்றியபோது அவன் உயர்த்தப்பட்டு உருமாற்றப்படுகின்றான். புதிய குறிக்கோள்களும், புதிய ஆற்றல்களும் கொண்ட புதிய உயிருருவாகவே மாறிவிடுகின்றான். புதியதும், மேம்பட்டதுமான ஓர் ஊமை நிறைவேற்றுதற்காக அவன் ஒரு புதிய உலகிலேயே குடியேறி விடுகின்றான்.
ஆக்கமெனும் கோயிலைத் தாங்கி அழகு செய்யத் தனது மிகுதியான வலிமையையும், ஒப்புமை கூற வியலாத நயத்தையும் வழங்குகின்ற நடுநிலையெனும் ஆதாரம் அத்தகையதாம்.