பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

335

ஆகவே, வருகின்ற, வந்து போகின்ற தேர்தல் திருவிழாக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டா. அதில் குதித்துக் கொம்மாளமிட்டுக் குளிர்காய விரும்பும் எவரையும் நீங்கள் நம்பவும் வேண்டா. அப்படி ஒரு வேளை நீங்களும் தேர்தலில் ஈடுபட்டு, எவரையேனும் உங்கள் மனத்துக்கும் அறிவுக்கும் பிடித்தவர் ஒருவர்க்கு, நீங்கள் ஒப்போலைவிட விரும்பினால், அவர் தனித்தமிழ் நாட்டுக் கொள்கை உடையவராக இருக்கட்டும்.

ஆமாம்! இந்தியக் கொடுங்கோல் சாதிமத வெறிகொண்டே பார்ப்பனீய முதலாளிய வடநாட்டு அரசினின்று தமிழகத்தை மீட்டுத் தனி இறையாண்மை அரசமைப்பவரையே அவ்வாறு உறுதி கொடுப்பவரையே தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள்!

தமிழ்நிலம், இதழ் எண் : 144, நவம்பர் 1990